Wednesday, December 21, 2016

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள்..3






1986ம் வருஷம்  கார்த்திகை இரண்டாம் சோமவாரத்தன்று  முன்னிரவில்..

ஸ்ரீபெரீவா அவர்கள் 

" முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. "


என்னும் திருவாசகம் அச்சோப் பதிகப்  பாடலில்  உள்ள 
 " சித்தமலம் அறிவித்து  சிவமாக்கி " 
என்பதன்   பொருளைக் குறிப்பிட்டு  நிறைவில் 

"ஆயுஸுக்கும்  த்யாகராஜாவையே நினைச்சிண்டிரு.." 
என்று மீளாஅடிமைக்கு  உத்தரவாயிற்று  ..

*******

பின்னர்  1991ம் வருஷம் ஸத்குரு ஸ்ரீசிவன் சார் அவர்கள் உத்தரவு பெற்று  பரீக்ஷைக்கு படிக்க  திருவாரூருக்குக் கிளம்பிய சமயம்  ஸ்ரீஸார்  அவர்கள்  ஆரூரனுக்குச் சொல்லியனுப்பியது .

"ஸந்த்யாகாலம்  கமலாலயத்திற்குப் போ.. ஸந்த்யாவந்தனம் பண்ணு .. 
ஸாயரக்ஷை  முடிஞ்சப்பறம் .. தியாகராஜஸ்வாமி   சன்னதிக்குப்   போ.. 
நேராக  நிற்காமல்..  கொஞ்சம் ஒதுங்கி நின்னு .. 

 " ஸ்வாமீ .. எனக்கு மந்த்ரம் தெரியாது ..  
பூஜை தெரியாது.. 
ஒண்ணுமே  தெரியாது.. 
ஒரு யோக்யதையும் கிடையாது.. 
நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்னு 
எங்க  குரு   சிவன் ஸார்  
என்னை ஸ்வாமி உங்க கிட்டே அனுப்பினார்னு.. 

ரெண்டு கையையும் முன்னாடி நீட்டி மத்தவா யாருக்கும் கேட்காதபடி .. பவ்யமா..  ஸ்வாமியிடம்   சொல்லுப்பா ..
மத்ததை ஸ்வாமி  பார்த்துப்பார்.. ! "




Monday, December 12, 2016

மழைக்கோள் : சூடாமணி உள்ளமுடையான்



சுக்ரனின் இயக்கத்தால் மழை நிலையை அறிந்து கொள்ள இயலும் ..
சூடாமணி உள்ளமுடையான் என்னும் தமிழ் ஜ்யோதிஷ நூல் சுமார் எட்டு நூற்றாண்டுகள் பழமையானது.. இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்துள்ளது.
இதை " வென்பதைக்குடி நாட்டு ப்ரமதேயம் பாண்டமங்கலம் பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்தினரான ஹரியின் புதல்வர் திருக்கோட்டியூர் நம்பி " என்பார் தமிழில் 1178ம் ஆண்டில் மொழிபெயர்த்துள்ளனர்.
"உள்ளமுடைச் சூடாமணிச் சோதிட நூல் " என்று வரும் குறிப்பே பிற்காலத்தில் சூடாமணி உள்ளமுடையான் என்று இந்நூலின் பெயராயிற்று...
ஜ்யோதிஷ சாஸ்த்ரக் களஞ்சியமாகத் திகழும் சூடாமணி உள்ளமுடையானில் 279ம் பாடல் சுக்ர சரிதை தொடர்புடையது ..
" கொடுஞ்சிலைவேள்
துவலை தோன்றில் துளியாய்ப் போம் சுறாவும் குடமும் துடர்மீனும் 
நவையில் வெள்ளி நின்றிடுமேல் நாளும் நாளும் மழை பெரிதாம். "
இந்தப் பாடலின்படி சுக்ர க்ரஹம் தநுஸு ராசியில் நிற்கும்பொழுது மழை தோன்றத் துளியாய்ப் போகும்.
மகரம் முதலான மூன்று ராசிகளில் நிற்கும்பொழுது நாளும் நாளும் அடைமழை பெய்யும் .

இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதிக்குப் பிறகு அசுரர் குருவின் பெயர்ச்சியால் மழை தோன்றிப் பிற்பாடு மிகும் என்று பொட்டி ஜோஸ்யர் சொன்னதும் உள்ளமுடையான் பாடலின் அடிப்படையில்தான் ..

Monday, November 28, 2016

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் : அக்டோபர் 1991 - திருவிசைநல்லூர் உத்ஸவம் ..


திருவிசைநல்லூர் ஸத்குரு  ஸ்ரீசிவன் ஸார்  அவர்களின் மனதிற்குகந்த ஸ்தலம்..  ஸ்ரீஸதாசிவ  ப்ரஹ்மேந்த்ர ஸரஸ்வதீ  ஸ்வாமிகள்   அவதரித்ததும் இங்குதான்..  தஞ்சையை ஆண்ட ஸாஹஜீ  போஜன் என்று புகழப்பட்ட ஷாஜி ராஜா மான்யமாக அளித்த அக்ரஹாரம் .. இவ்வரசனின் காலத்தில் தஞ்சை மண்டலத்தில்  அத்வைத ராஜ்யலக்ஷ்மீ பொலிந்திலங்கினாள் ..
ஷாஜி ராஜரின் சரித்திரத்தை நமக்கு சுவையுடன் அறிவிக்கிறது  ஸ்ரீஐயாவாள் அவர்கள் இயற்றிய ஸாஹேந்த்ர விலாஸம்  என்னும் நூல்..

ஸ்ரீஸார் அவர்களிடம் அடைக்கலமாகியிருந்த காலத்தில்   இயன்றபோதெல்லாம் திருவிசைநல்லூர் சென்று அங்குள்ள ஸ்ரீஐயாவாள் மடத்தில்..  ஸ்ரீஸார் அவர்கள் தனது ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தில் எழுதியுள்ள ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் திவ்ய சரித்ரத்தைப் பாராயணம் செய்து விட்டு வருவது  ஆரூரனின் வழக்கம்..

ஸ்ரீஐயாவாள் சரித்திரத்தை எத்தனையோ பேர்  எழுதியிருப்பினும் ஸ்ரீஸார் அவர்களது வர்ணனம்  நேரில் காண்பது போலவேயிருக்கும்..  மனதை உருக்கிவிடும்.. ஒருமுறையாவது  அந்த புண்ய ஸ்தலத்தை தரிசிக்க வேணுமென்ற ஆவலை வாசிப்பவர்களின்  மனத்தில் தோற்றுவிக்கும்..

திருவிசைநல்லூர் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்திற்கு  முதல் பத்ரிகை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளுக்குத்தான் ஸமர்ப்பிக்கப்படும்..அடுத்த பத்ரிகை  ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார்  அவர்களுக்கு திருவிசநல்லூர் மடத்து நிர்வாஹிகள் சார்பில் நேரில் வைக்கப்படும்.. பிறகுதான் மற்றவர்களுக்கெல்லாம் உத்ஸவ பத்ரிகை அனுப்பி வைக்கப்படும்.. 

1991ம் வருஷம்.. ஸ்ரீஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவ பத்ரிகையை ஸத்குரு ஸ்ரீஸார் அவர்களுக்கு  நேரில் சமர்ப்பிக்க வேண்டி உத்ஸவ  கமிட்டி முக்யஸ்தரான அவ்வூர்ப் பெரியவரான  ராயர் ஒருவர் வந்திருந்தார்.. 

திருவிசைநல்லூர் உத்ஸவமானதால்  என்னுள் இயல்பான ஒரு ஆர்வம் ஏற்பட்டது..  அவரை இருக்க வைத்து .. உபசரித்து .. பிறகு அவரை ஸ்ரீஸார் அவர்களிடம் ஆஜர்படுத்தினேன்.. 

ஸ்ரீஸார்..  அவரிடம் மிகுந்த ப்ரியத்துடன்  பல வருஷத்து விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அப்போதுதான் ஸ்ரீசார் அவர்களுக்கு திருவிசைநல்லூர் மடத்துடனும் .. ஊராருடனும்  இருந்த தொடர்பை அறிந்துகொண்டேன்..

ஸ்ரீஐயாவாள்  ஸ்ரீபரமேச்வராம்சம் .. அந்த மடத்தின்  சொத்தை அபகரித்தவர்கள் வாழ்ந்ததில்லை..  விகடம்ராமசுவாமி சாஸ்திரிகள் என்ற ஒரு மஹாமேதை  இந்த உத்ஸவத்தை  மேலும் விரிவாக்கி ப்ரபலப்படுத்தினார்.. இந்த மடத்தில்  பல காலமாக ஸ்த்ரீகள் பாடும்  வழக்கம் இல்லை..  என அதுவரை தெரியாத பல அரிய விஷயங்கள் அப்போது வெளிவந்தன.

பிற்பாடு .. ஸ்ரீபெரீவா அவர்கள் சம்பந்தமான ஒரு ஆச்சர்யமான நிகழ்வை ராயர் சொன்னார்..

" சில வருஷங்களுக்கு முன்னால்  தஞ்சாவூர் ப்ரதேசத்தில்  ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை..  காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை.. ஸ்ரீஐயாவாள்  மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும்  வறண்டு போனது..  

ஸ்ரீஐயாவாள்  மடத்தின்  கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம்  அந்த வருஷம்   நடக்குமா என்ற பயம் வந்து விட்டது.. 

உத்ஸவ பத்ரிகையை  எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம்.. மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம்..  அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன ..

ஸ்ரீபெரிவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டு .. சைகையால் அருகிலிருந்த  ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து  ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச்சொன்னார்கள்..  அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால்  தெரியாது.. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜாலம் நிரம்பிய ஒரு பெரிய  செப்புக் குடத்தைத்  தூக்கி வந்து  ஸ்ரீபெரீவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார்.. 

உடனே ஸ்ரீபெரீவா  எங்களிடம் "இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசைநல்லூருக்குக்  கொண்டுபோய் வையுங்கள்.. மழை வராவிட்டால்  ஸ்ரீஐயாவாள்  மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில்  கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! " என்று அபயம் காட்டி எங்களுக்கு  ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள்.. 

திருவிசைநல்லூருக்குத் திரும்பினோம்.. 

ஸ்ரீபெரீவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் .. அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில்  ஆழ்த்தியபடியே இருந்தது.. 

உத்ஸவத்திற்கு  இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை .. காவேரியில் ப்ரவாஹமேயில்லை..  வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன..ஸ்ரீஐயாவாள்  மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது..

உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம்.. என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம்.. எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம் .. 

"ஸ்ரீபெரீவா  அவர்களின் உத்தரவு ப்ரகாரம்  செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக்  கிணற்றில் ஊற்றிவிடுவோம்.. அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட  வேண்டியதுதான் " என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக்  கிணற்றில் சேர்த்தோம்.. 

அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் .. 

கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன்  கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப்  பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம் ..   அதை மீண்டும் காட்டும்படியாக ..

கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் .. செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரீவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில்..  தொடங்கியது  பெரும் மழை.. விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில்  மிதக்க வைத்தது ..   

ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல்  மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது.. 

அமாவாஸ்யை  அன்று விடியற்காலை   கிணற்றின்  கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர்.. அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட  முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக  அதிகமாக இருந்தது..  

பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர்.. 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம்..

திருவிசைநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது..  

 உடனே ..  ஸ்ரீபெரீவா அவர்கள்  புன்முறுவலுடன்..    

" திருவிசநல்லூர் மடத்து   கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு,, எப்போதும் போல ,,  இந்த வருஷமும் கங்கை வந்தாளா ?. என்று எங்களை பார்த்துக்  கேட்டதை  என்னிக்கும் மறக்க முடியாது!"  என்று முடித்தார் ராவ்ஜீ ..





அடுத்து அவர் சொன்னது ...







Thursday, November 3, 2016

ஸ்வாமிநாதன்... 2




தங்கக் கொடிமரத்தின் அருகில் வந்ததும் "ஸார்.. ஸ்வாமி அணிந்திருந்த தங்கக் கோவணத்த பாத்தீங்களா..? என்று கேட்டார் உடையார் தம்பி...
கேட்டவர் ஸ்ரீபெரீவா அவர்களைப் பற்றித் தொடர்ந்தார்... 

"டெல்லிலே உத்தர ஸ்வாமிமலை கோவில் கட்டணும்னு அங்கிருந்த தமிழர்கள்..  அரசியல் முக்கியஸ்தர்கள்  எல்லோருமே சேர்ந்து தீர்மானிச்சு.. பெரீயவங்ககிட்டே வந்து அதைத் தெரிவிச்சுக்கிட்டாங்க.. 

மூணு வருஷத்துல மஹாபலிபுரம் ஸ்தபதி மூலமா ஸ்வாமிமலை முருகன் மாதிரி விக்ரஹம் தயார் பண்ணி அப்போ காஞ்சிபுரத்தில் இருந்த பெரீயவங்களிடம் கொண்டு வந்து காண்பிச்சுருக்காங்க..

சிலையருகில் வந்து நின்னு சற்று நேரம் அதை உற்றுப் பார்த்த பெரீயவங்க .. சிலையின் சிரசுப் பகுதியைத்    தொட்டுக் காட்டி - 


"ஸ்வாமிநாத சுவாமிக்கு இருக்கறா  மாதிரி.. சிகை (குடுமி) 
அமைப்பு  இந்த விக்ரஹத்துக்கு இருக்கோ பாரு?" 

- அப்டின்னு ஸ்தபதியைப் பார்த்து உத்தரவாச்சாம்.. 

அப்போதுதான் ஸ்தபதிக்கு ஸ்வாமிநாத சுவாமிக்கு சிரசின் மேற்புறம் இருக்கும் சோழிய முன்குடுமி அமைப்பு மாதிரி தான் வடித்த சிலையில் வைக்கவில்லை என்பது தோன்றியது..எவ்வளவோ பார்த்துப் பார்த்து செய்தும் இரு சிலைகளுக்குள்ளும் ஒரு வித்யாசம் வந்துடுத்தேன்னு ஸ்தபதிக்கு மனசுக்குள் குழப்பம் ஏற்பட்டுப் போச்சு .. 

உடனே பெரீயவங்க புன்முறுவலுடன் -

 "ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு இப்டி ஒரு திருவுள்ளம் இருக்கு போல இருக்கு.. அவர் தெற்கில் இருக்கார் .. இவர்.. வடக்கில் .. உத்தர ஸ்வாமிமலையில் இருக்கப் போறார் .. அதனால் அந்தப்பக்கத்து ஆசாரப்படியே அமையட்டும்னு   ரெண்டு விக்ரஹங்களும் நுணுக்கமான ஒரு வித்யாஸம் இருக்கறா மாதிரிப் பண்ணிருக்கார்..அப்டியே இருக்கட்டும்!  " 

 - என்று சொல்லி சுவாமிக்குத் தன் திருக்கரங்களாலேயே விபூதி அபிஷேகம் பண்ணி, பிற்பாடு  ஸ்தபதிக்குரிய பஹுமானங்களையும் செய்து அனுப்பிச்சதா என் தாத்தா சுவாமிநாத உடையார் என்னிடம் சொல்லிருக்காங்க.. " என்று சொன்னார்..

சென்ற 2000மாவது வருஷத்துல.. எங்க தகப்பனார் ராஜகோபால உடையார் தலைமையில் திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் செய்வதற்குச் சில நாட்கள் இருக்கும்போது  கோயிலுக்கு வந்து திருப்பணி வேலைகளைத் துரிதப்படுத்திக்கொண்டிருந்தார் .. 

அப்போது அங்கு வந்த பெரிய சிவாசாரியார் என் தகப்பனாரை சன்னதிக்குள் அழைத்துச் சென்று   சுவாமிநாதசுவாமியின் இடுப்பில் சார்த்தியிருந்த வெள்ளிக் கௌபீனம்  மிகவும் நாள்பட்டதாகையால் கருத்தும்.. நெளிந்தும் போயிருந்ததைக் காண்பித்து  உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேணுமென்று வேண்டிக்கொண்டார்.

 "இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படி மாற்று ஏற்பாடு செய்வது..?" என்று யோசித்தபடி என் தகப்பனார்  மலையிலிருந்து இறங்கிக் கீழிருக்கும்  திருக்கோயில் அலுவலத்துக்குள்  வந்து அமர்ந்தார் .. 

"நான்கு நாட்கள்தானே இன்னும் இருக்கு.. அதற்குள் எப்படி ஏற்பாடு செய்வது?" என்று என்னைப்  பார்த்துக் கேட்டார்.

அதேசமயத்தில் திருக்கோயில் அலுவலகத் தொலைபேசியில் என் தகப்பனாருக்கு ஒரு அழைப்பு வந்தது..  காஞ்சி ஸ்ரீமடத்திலிருந்து முக்கியமான மனுஷாள் அப்பாவிடம் பேசவேணுமென்று  எங்கள் இல்லத்திற்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள்.. அப்பா அவர்களிடம் பேசினார் .. 

விபரம் இதுதான்.. 

"ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி திருமேனியில் எப்போதும் இருக்கறா  மாதிரி ஸ்ரீமடத்திலிருந்து  ஒரு ஆபரணம்  சார்த்த வேணும்.. அதுக்காக  விசேஷமா.. கால் கிலோ எடைக்கு,  புதுசாக  ஸ்வர்ணத்திலே   ஒரு கௌபீனம் செய்து.. ஸ்ரீமடத்தில் இப்போ ரெடியா இருக்கு .. நம்ப தண்ணீர்க்குன்னம் உடையார்தான் அங்கு கோவில்  திருப்பணியை முன்னாடி நின்னு செய்யறார்.. அதனால அவர்கிட்டேயும், சிவாசார்யாள்கிட்டேயும் ஸ்ரீமடத்தின் சார்பில் ஸ்வாமிக்கு ஸ்வர்ண கௌபீனம்  சார்த்தற விஷயத்தைத் தெரிவிக்கணும் என்பதான ஸ்ரீபுதுப்பெரியவாளின்   ஆக்ஞை  விபரத்தை  தங்களிடம் சொல்வதற்காக வந்தோம் !"  

என்று ஸ்ரீமடத்து அன்பர்கள் என் தந்தையாரிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். 

 " பெரீயவங்க உத்தரவாச்சுன்னா  அது ஸ்வாமிநாதஸ்வாமியின் 
உத்தரவுதான் .. அப்படியே செய்துறலாம்னு எங்க பதிலை 
மஹாசந்நிதானத்தில தெரிவிச்சுடுங்க! " 

என்று பதிலளித்தார் என் தந்தை..

ஸ்ரீபுதுப்பெரியவர்களும்,  ஸ்ரீமடத்துப் பரிவாரங்களுடன் முன்னதாகவே ஸ்வாமிமலைக்கு விஜயம் செய்து ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியின் கும்பாபிஷேகத்தை விமர்சையாக நடத்திவைத்தார்கள். ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஸ்ரீமடத்திலிருந்து ஸமர்ப்பிக்கப்பட்ட  ஸ்வர்ண கௌபீனமும் அவர்கள் திருமுன்னிலையில்  சார்த்தப்பட்டு விசேஷ பூஜைகளும் நடந்தேறின." என்று சொல்லி முடித்தார் உடையார் தம்பி.



Monday, October 31, 2016

ஸ்வாமிநாதன் ... 1



இன்று ஸ்வாமிமலை ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஸ்கந்த சஷ்டி விசேஷ அபிஷேகம், ஷண்முகார்ச்சனை, ஸமாராதனைக்கு ஸ்ரீமடத்தின் பழவடியாருள் முக்யஸ்தரான தண்ணீர்க்குன்னம் உடையார் அழைத்திருந்தார்..
பூஜ்யஸ்ரீ ஆசார்யர்களின் திருவுளப்படி பெருமளவு பசும்பால், விபூதி ஆகியனவும் ஸ்ரீமடத்தின் வாஞ்சியூர் கோசாலையிலிருந்து அபிஷேகத்திற்காகச் சேர்ப்பிக்கப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களும் தமது பரிவாரத்துடன் அங்கு வந்திருந்தார்கள்..
சோழிய முன் உச்சிக் குடுமியுடன்.. ஸ்வர்ண கௌபீனத்துடன்.. வலது கையில் பலாச தண்டம் ஏந்தி.. ப்ரம்மசாரிக் கோலத்தில் ஸ்வாமி நின்றார்..
ஸன்னதிமுறை சிவாசார்யர் தம் இரு கைககள் நிறைய விபூதியை அள்ளி அள்ளி எடுத்துத் திருமேனி முழுதும் நிறைத்தார்..
.ஏராளமான த்ரவ்யங்களைக் கொண்டு ஸ்வாமிக்குச் செய்விக்கப்பட்ட அபிஷேகம் நிறைவுற்றது..
அலங்காரம் செய்தார்கள்..முத்தங்கி, ஸ்வர்ண க்ரீடம், வஜ்ரவேல், ஸுப்ரமண்ய ஸஹஸ்ரநாமங்கள் பொறித்த ஆயிரத்தெட்டு ஸ்வர்ணத் தாமரை மாலை, மணிகள் பதித்த ருத்ராக்ஷ மாலையுடன் ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி ஜ்வலித்தார்...
அர்த்த மண்டபத்தில் ஸ்வாமி அருகில் நின்ற நேரத்தில்... ஸ்ரீசிவன்சார் அவர்கள்.. தம் குல தெய்வமான ஸ்ரீஸ்வாமிநாதஸ்வாமியின் அருமை பற்றியும்.. ஸ்ரீபெரீவா அவர்களுக்கு .. அவர்களின் குலதெய்வமான ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியின் பெயரையே வைத்தது பற்றியும் ஆரூரனிடம் பலகாலும் சொன்னவை நினைவில் தோன்றின..
பூஜைகள் நிறைவுற்றன.. திருவடிகளில் தோய்ந்திருந்த அபிஷேக விபூதி ப்ரஸாதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்..
தங்கக் கொடிமரத்தின் அருகில் வந்ததும் "ஸார்.. ஸ்வாமி அணிந்திருந்த தங்கக் கோவணத்த பாத்தீங்களா..? என்று கேட்டார் உடையார் தம்பி...
கேட்டவர் ஸ்ரீபெரீவா அவர்களைப் பற்றித் தொடர்ந்தார்... 

Monday, October 24, 2016

பாயிஸாயேப்மார்களின் சத்திர தர்மம் : தர்ம ராஜ்யம் - 2

தஞ்சை மராட்டிய  மன்னர்களின் பாயிஸாயேப்மார்.. அவர்களுக்கென மன்னர்கள் அளித்துள்ள ஐஸ்வர்யத்தைக் கொண்டு கி.பி.1743க்கும் 1837க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏராளமான சத்திரங்களை தர்மப் பணிக்கென நிறுவிய அதிசயம் தஞ்சை மராட்டியரின் தர்மராஜ்யத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
அரண்மனைக்குச் சொந்தமான சத்திரங்கள் மொத்தம் 20. இந்த சத்திரங்களுள் பழமையானவை  13. மன்னர்களின் துணைவியரான பாயிஸாயேப்மாரின் வசமே அவற்றின் நிர்வாகமும் இருந்தது.  பாயிஸாயேப்களின் பெயராலேயே தர்ம  சத்திரங்களும் வழங்கப்பெற்றன. அவர்களது மறைவுக்குப் பின்னரும் வெகு காலம் வரைக்கும் நிலைத்து நின்றன.

மிகப் பழமையானது  சூரக்கோட்டையிலிருந்த முதலாம் துளஜா மஹாராஜரின் மனைவி ராஜகுமாராம்பா பாயி பெயராலமைந்த  சத்திரம். 

பிறகு ப்ரதாபஸிம்ஹ  மஹாராஜரின் காலத்தில் திருபுவனத்தில் சக்குவாரம்பா சத்திரம், நீடாமங்கலத்தில் யமுனாம்பா சத்திரம், மணமேற்குடியில் த்ரௌபதம்பா சத்திரம் ஆகியன அமைக்கப் பெற்றன.

இரண்டாம் துளஜா மஹாராஜரின் காலத்தில் மீனமேசலில் (மீமிசல்) ராஜகுமாரம்பா சத்திரம், ராஜாமடத்தில் மோஹனாம்பா, தாராசுரத்தில் ராஜஸாம்பா சத்திரம், வேளன்குளத்தில்  ஸுலக்ஷணாம்பா  சத்திரம், மஹாதேவ பட்டினத்தில் உமாபாயி சத்திரம் என்னும் ஐந்து சத்திரங்கள் உருவாயின.

இரண்டாம் ஸரபோஜி மஹாராஜர் காலத்தில் ஒரத்தநாட்டில் முக்தாம்பா சத்திரமும், இரண்டாம் சிவாஜி மஹாராஜர் காலத்தில் சூரக்கோட்டையில் சைதம்பா சத்திரம், மல்லியம் அஹல்யாபாயி  சத்திரம்,  திருவையாற்றில் பஞ்சநத மோகனாம்பாபாயி சத்திரம் ஆகியன தோன்றின.

இவை தவிர்த்து பள்ளியக்ரஹாரத்தில் லக்ஷ்மீராஜபுரம் சத்திரம், தஞ்சை நடார் சத்திரம்,  கோட்டை அன்ன  சத்திரம், ச்ரேயஸ் சத்திரம், பட்டுக்கோட்டையில் காசாங்குளம் சத்திரம், தனுஷ்கோடியில் சேதுக்கரைச் சத்திரம் , ராமேச்வரத்தில் ஒரு சத்திரமும் இருந்தன.
திருவாரூர் ராஜாங்க கட்டளை, அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை, புரீ ஜகன்னாதத்தில்  நித்ய நைவேத்யம் அன்னதானக் கட்டளை, ஸ்ரீகாசி க்ஷேத்ரத்தில் பனசைத் திருமடம் மூலம்  நித்ய அன்னதானம் முதலியனவும்  நடைபெற்று வந்தன. 

சத்திர தர்மம் எவ்வாறு நடைபெற வேணுமென்பதற்கான  விதிமுறைகளை பழைய மோடி ஆவணம் ஒன்று காட்டுகிறது. 

"கதியற்றவன், சம்பாதிக்கச் சக்தியற்றவன், பரதேசி ஆகியோர்க்கும், வழிப்போக்கன், குருடர், முடவர், அங்க ஹீனமுடையோர்,  முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கும் சத்திரத்தில் இலவச ஆகாரமும், தங்க இடமும் அளிக்கலாம். பெரிய அதிகாரிகள், அந்தணர்கள், பைராகிகள், பெரியோர்களுக்கு உலுப்பை (உணவுக்கான தானியங்கள்,  உணவு தயாரிக்கத் தேவையான  மளிகை மற்றும் இதர பொருட்கள்) அளிக்கலாம். சத்திரத்தில் இருக்கும் உத்யோகஸ்தர்கள், வேலையாட்கள் யாரும் அங்கு உண்ணக்கூடாது. சத்திரத்திலிருந்து சாமான்களை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படிச் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். ஊரிலுள்ளவர்கள் ஜீவனோபாயம் செய்வதற்கும், சோம்பேறிகள் தங்குவதற்கும் எவ்விதத்திலும் இடம் கொடுக்கக் கூடாதென்ற கண்டிப்பான ஆணையும்  ஸேனா துரந்தரர் நீலகண்ட ராவ் ஆனந்தராவ் ஜாதவ் அவர்களால் வெளியிடப்பட்டது. 

(923-9-62)

வழிப்போக்கர்கள் யாராவது நோயுற்று சத்திர தர்மத்தை நாடினால் அவர்களுக்கு சத்திரத்தின் மருத்துவரைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படும். அவர்கள் நோய் குணமாகும் வரையிலும் பத்தியம், மருந்து  வகையறா செய்து அவர்கள் வசம் கொடுத்தனுப்பப்படும். யாத்திரையை மேற்கொண்டு அவர்கள் தொடர இது உதவியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு வழக்கத்தில் இருந்தது.முக்தாம்பாள் அண்ணா சத்திரம், ச்ரேயஸ் சத்திரம் முதலியவற்றில் பிள்ளைகள் தாங்கிப் படிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. 

சத்திரங்களுக்கென பாயிஸாயப்மார்கள் தமது சேமிப்பிலிருந்து ஏராளமான சொத்துக்களை வழங்கியிருந்தனர். அவை அனைத்தும் செம்மையுடன் பேணப்பட்டு கிடைத்த பொருளைக் கொண்டு சத்திர தர்மம் தடையின்றி நடந்தது. தஞ்சை மன்னர்கள் அனைவரும்  சத்திர தர்மத்தைக் கண்போல் பாதுகாத்தனர். 

தஞ்சை மராட்டியரின் தர்ம ராஜ்யம் தவிர   இந்தியாவின் எந்த ஒரு ஸம்ஸ்தானத்திலும்.. இதையொத்த தர்மம் தடையின்றி வெகு காலம் நடந்ததில்லை. 

1817ம் ஆண்டு சட்டத்தின்படி சத்திர  நிர்வாகம்  கும்பினியார் வசமாகியது.. 

பிற்காலத்தில்,  சுதந்திர இந்தியாவில்   சத்திர நிர்வாகம் தேய்மதி போலத் தளர்ச்சியுறத்  தொடங்கிற்று. சத்திரங்கள் இருந்த இடங்கள் பாழ்பட்டன. சத்திரங்களின் சொத்துக்கள் பறிபோயின..  




(தொடரும்)


Sunday, October 23, 2016

தர்ம ராஜ்யம் - 1


சத்ரபதி சிவாஜி போன்ற மராட்டிய  மாமன்னர்களின்  அரசாட்சி அமைப்புடன் சோழர் மற்றும் நாயக்கர் காலத்திலிருந்து தொடர்ந்த  தஞ்சை  மரபும் கலந்த கலவையாக  அமைந்ததே தஞ்சை மராட்டியர் அரசு முறை ..

தஞ்சை மராட்டிய மன்னர்களின் மோடி  ஆவணங்கள்  அக்காலத்துப் பண்பாடு மற்றும் வரலாறுச் செய்திகள் பலவற்றையும் அறிந்து  கொள்ள  நமக்குத் துணை நிற்கின்றன.. 

சமயம், சமூகம், கல்வி, ஆட்சி, அரசுரிமை, கலை, இலக்கியம், வணிகம் என எண்ணிறந்த விஷயங்களைச்  சுருக்கிப் பாங்குறத்  தருகின்றன  தஞ்சை மராட்டிய அரசர்களின் மோடி ஆவணங்கள்..   

ஏறக்குறைய  இருநூறாண்டுகள்  கால இடைவெளியில் தஞ்சை மராட்டியரின்  " தர்ம ராஜ்யம்"  தொடர்பான பல்வேறு அரிய  நிகழ்வுகளையும்  மோடி ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன..

சுமார் 960 மூட்டைகளாக கட்டப்பட்டுப்  பாதுகாக்கப்பட்டு வரும் இவ்வரிய சுவடிகளின் மொழிபெயர்ப்பைத் தஞ்சை மன்னர் ஸரபோஜியின் ஸரஸ்வதி மஹால் நூலகமும், பிற்பாடு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டத்  தக்கது.

தஞ்சை மராட்டிய மன்னர்களின் தர்ம ராஜ்யத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்க ..கிடைத்தற்கரிய பொக்கிஷமான இவ்வாவணங்கள் சிலவற்றின் சுருக்கத்தை  இயன்றவரை  பதிவு செய்ய விருப்பம் . 

இறைவன் அருள் துணை நிற்க..

ஆவணம் எண்  :  101C/173 

(ஹூஜூர்  கச்சேரியில் ப்ரசுரித்த உத்தரவின் சுருக்கம்)

1. கச்சேரி உத்யோகஸ்தர்கள் வீட்டுக்கு மிராஸ்தார்களோ அல்லது அவர்களது கார்யஸ்தர்களோ ஒருவரும் போகக்கூடாது.  
2. உத்யோகஸ்தர்கள் மிராஸ்தார்களுடையவோ அல்லது அவர்களுடைய கார்யஸ்தர்களுடைய வீட்டிலோ அல்லது கச்சேரியிலோ வேறு எந்த இடங்களிலோ ரகஸ்யமாகப் பேசக்கூடாது.
3. உத்யோகஸ்தர்கள் ஒருவருடைய வீட்டுக்கு ஒருவர் சென்று ராஜ்யத்தின் ஸமாஜாரங்களைப் பேசக் கூடாது .
அவ்விஷயத்தில் யோஜனைகளையும்  செய்யக்கூடாது.
4. மேற்படி எவ்விதமாகவாவது சங்கதிகள் நமக்குத் தெரிந்தால் அத்தருணமே அவ்வுத்யோகஸ்தர்களை வேலையிலிருந்து நிக்கி அவர்களிடமிருந்து சட்ட விதிகளின்படி பெரும் அபராதம் விதிக்கப்படும். 

இது விஷயம்  தனித் தனியாய்  ஒன்பது தாலுக்காக்களுக்கும் எழுதி அனுப்பியுள்ளதையும் அறியவும்.

முகாம் : நாகப்பட்டினம் கச்சேரி 
தேதி      : 02 மார்ச் 1827 
பகல் 8 மணி,  சனிக்கிழமை 

Tuesday, October 4, 2016

ஸ்ரீசார்.. டயரிக் குறிப்புகள்

 ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸரின்  சரிதம் மற்றும் அவரின் கதைகளில் ஸ்ரீசார் அவர்களுக்கு ரொம்ப இஷ்டம் உண்டு.. சிஷ்யர்கள்  அடிக்கடி இவற்றை அவர்களிடம்  படித்துக் காட்டியபடி இருப்பது வழக்கம்..

ஒருநாள், ஸ்ரீம.(ஸ்ரீமஹேந்த்ர நாதர்) என்னும் அணுக்கத்தொண்டர் ஸ்ரீபரமஹம்ஸரின் உடனிருந்து  அவ்வப்போது நிகழ்ந்தவற்றை எழுதி வைத்து வந்திருப்பது பற்றி பேச்சு வந்தது.. 

அப்போது..   ஸ்ரீசார்  அவர்களின் சொல்லமுதத்தையும் அவ்வப்போது  எழுதி வைத்துக்கொள்ள வேணும்  என்று ஆரூரன்  ப்ரார்த்தித்தவுடன் .. 

ஸ்ரீசார் அவர்கள் புன்சிரிப்புடன் தன்னருகில் இருந்த ஒரு டைரியை எடுத்து .. தம் திருக்கரத்தால்   பெயரை எழுதிக் கொடுத்து ..

ஸ்ரீசார் அவர்களின் திருமுன்னிலையில்  அன்றாடம் நிகழ்வனவற்றையும், அவர்கள் சொல்வனவற்றையும் எழுதிக்கொண்டுவரப் பணித்தருளினார்கள்..
.
சமயம்  கிடைக்கும்போதெல்லாம் ஆரூரனின்  டயரி குறிப்புகளை ஸ்ரீசார் அவர்களும் திருக்கண்சார்த்தி  வந்தார்கள். 1992ம் ஆண்டு ஜூன் மாசம் 27ம் தேதி முதல் இந்தக் குறிப்புகள் எழுதிவரப்பட்டன... 

ஸ்ரீசார் அவர்கள் தொடர்பான சம்பவங்கள், அவர்களின் அருள்வாக்காக மலர்ந்தவை மட்டுமின்றி...  ஸ்ரீபெரீவா அவர்களின் பூர்வாச்ரம பெற்றோர் மற்றும் குடும்ப நிகழ்வுகள், அவர்களின் இளமைப் பருவம், அவர்கள் ஜகதாசார்யாளாகப் பட்டமேற்ற பிறகு நடந்தவை  என ஏராளமான சம்பவங்கள் ..  

இவை தவிர, ஸத்குரு  ஸ்ரீசார் அவர்கள்..  அடிப்படை ஆத்மீகம் மற்றும் வாழ்வியல் முறைகள் பற்றியும்   குழந்தைக்கு அவ்வப்போது புகட்டி வந்துள்ளனவும் இந்த நோட்டு புஸ்தகத்தில் இடம்பெற்றுள்ளன..

சந்தர்ப்பம்  வாய்க்கும்போதெல்லாம் ஸத்குரு  ஸ்ரீசார் சொல்லிவந்த இவற்றை டயரிக் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டது  எழுதியவனின்  தவப்பயன்தான் 



Friday, September 23, 2016

நடந்தாய் வாழி காவேரி ..




திருவையாற்றில் காவிரியில் பெரிய  கப்பல் கட்டி, அதனை  அக்காலத்தில் நிரம்பி வழிந்த காவிரியின்  பெரும் கிளைநதியான  அரிசிலாற்றின் வழியே காரைக்காலுக்கு கொண்டு வந்து.. "ப்ரஹதீச்வர  ப்ரஸாத் " என்னும் தனது வணிகக்  கலத்தைக்   கடலினுள் செலுத்தினாராம் இரண்டாம்  ஸரபோஜி மஹாராஜர்..

நாகூர், காரைக்கால் துறைமுகங்களில்    ஆங்கில, போர்ச்சுகீசிய, பிரெஞ்சு  மற்றும் டேனிஷ் வணிகர்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட பொருட்கள்   வெட்டாறு , மற்றும் அரிசிலாறு ஆகியவற்றின்  ஆழமும், அகலமும் கொண்ட  பெரும்   நீர்த்தடங்களின்  வழியே  சிறு கலங்கள் மற்றும் தோணிகள்  மூலம் உள்நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டனவாம் ..

பூந்தோட்டத்திலிருந்து..  விழிதியூர் கிராமம் வரையிலும் முடிகொண்டான் மற்றும் அரிசில்மாநதிக்கரைகளில் பெருமளவு நீண்ட இழைப் பருத்தி பயிரிடப்பட்டு, கரையோர  கிராமங்களில் இருந்த அனுபவமும், திறமையும் கொண்ட  பெண்களால்  பஞ்சடிக்கப்பட்டு, பிற்பாடு உற்பத்தியான நூற்கண்டுகள்    காரைக்கால் பகுதியில் இருந்த அக்ஷயலிங்க நூல்கடை, முருக நூல்கடை, வீழிநாத சுவாமி நூல்கடை போன்ற பல  பழம்பெரும்  நூல் விற்பனை மையங்கள் மூலம் நெசவாளர்களுக்கு விற்பனையானது  என்கிறது பதினெட்டாம் நூற்றாண்டு   வரலாற்றுச் சுவடி.. 

காவிரிக்கரை  கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட  " ரம்பூட்டின் " என்னும் உயர் ரக துணிக்கு அயல்நாடுகளில் பெரிய அளவு  வரவேற்பு இருந்துள்ளது.. 
.
அதிலும், ஒவ்வொரு ஆண்டும்  தென்கிழக்காசிய நாடுகளுக்கு மட்டுமே பல்லாயிரம் முழம் ரம்பூட்டின் துணி  கரையோர  நெசவாளர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை  பிரெஞ்ச்சு ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன...

மேற்கே  திருக்காட்டுப்பள்ளி முதல்  கிழக்கில் நன்னிலம்,  பேரளம். மாயூரம் மற்றும் சீர்காழி பகுதிகள் வரையிலும் உற்பத்தியான  சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நெல் வகைகள் வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது. 

இந்த நெல் முழுதும்  காவிரியின் ஏழு கிளை நதிகள் வங்கக் கடலுடன் சங்கமிக்கும்   காரைக்கால்  பகுதிக்கு ஏழு  நீர்வழிகள்  மூலம் தோணிகளில் கொண்டுவரப்பட்டு  அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் தயாரான  உயர்தர அரிசி ஜப்பான் வரைக்கும் ஏற்றுமதியானது என்ற செய்தியையும் பிரெஞ்ச்சு வாணிபக் குறிப்புகள் வாயிலாக அறிகிறோம்...

நாகை,  நாகூர், காரைக்கால், தரங்கம்பாடி  என்று  பத்து மைல்  தூரத்திற்குள் நான்கு உலகப் பிரசித்தி பெற்ற துறைமுகங்கள்  பல நூற்றாண்டுகளாகச் செழித்து வந்திருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் ஸாத்யம் .. 

ஏனென்றால் உலகில் வேறெங்கும் இத்தனை செழிப்பான  மண்ணும்,  வற்றாத நீரோட்டமும், கைத்தொழிலிற் சிறந்த ஜன ஸமூஹமும்   கிடையாதே..!

அதனால்தான் பிரெஞ்ச்சுக்காரர்களைத் தொலைத்துக்கட்டிக் காரைக்காலை மீண்டும் தஞ்சை அரசின் பிடிக்குள் கொண்டு வந்த ஆங்கிலப்படையைப் பாராட்டிய  ஸரபோஜி  மன்னர் .. நெப்போலியனை வீழ்த்திய இங்கிலீஷ்காரர்களைப் பெருமைப் படுத்தும் வண்ணம் சாளுவநாயக்கன்பட்டினத்தில் மனோரா என்னும் கோபுரத்தையும்  கட்டி மகிழ்ந்தார்.. 

பிற்பாடு  காரைக்கால் பிரதேசம் வடக்குத் தஞ்சை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு..   தெற்கே ஆவுடையார்  கோயில் முதல் வடக்கே கொள்ளிடம் வரைக்கும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக  உருவெடுத்ததால்  முன்னைவிட அதிக  பலமுடனும், செல்வ வளத்துடனும்   திகழ்ந்தனர்  தஞ்சை மாவட்ட விவசாயிகள்.. 

வடபாதி மங்கலம், களப்பாழ், மன்னார்குடி எஸ்டேட்   முதலியார்கள் .. கபிஸ்தலம் மூப்பனார்,   திருவாரூர், மன்னை ,  தஞ்சை பகுதி முக்குலத்தோர், முதன்மையான  பூண்டி  வாண்டையார், கீழ்வேளூர், நாகை  பகுதி நாயுடுக்கள், மயிலாடுதுறை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வன்னியர்கள், பதினெட்டு க்ராம செங்குந்தர்கள், தண்ணீர்க்குன்னம். சித்தாய்மூர்,  மங்க நல்லூர் உடையார்கள் , அணைக்குடிபிள்ளை முதலான சைவ  வேளாளர்கள்,    சோழியர், பதினெட்டு க்ராம  வாத்திமர்கள், பட்டுக்கோட்டை சின்னையா  மற்றும்  குன்னியூர், திருக்களாவூர், வேப்பத்தூர், கல்யாணபுரம்,  கணபதி அக்ரஹாரம்,  கதிராமங்கலம், பாஸ்கரராஜபுரம்  முதல்  காளியாக்குடி, சட்டநாதபுரம், கடவாசல் வரையும் இருந்த வடமர்கள், மன்னார்குடி  எஸ்டேட், ஆமூர், திருக்குடந்தை, வடுவூர் அய்யங்கார்கள் , கும்பகோணம் ராயர் ஸஹோதரர்கள் ,   என்று ஐம்பதாண்டுகள்  முன்னர் வரைக்கும் ..  எட்டு திசைகளையும் கட்டி ஆண்டனர் தஞ்சை டெல்டா ப்ரதேச   மிராசுதார்கள் .. 


இது தவிர ,  டெல்டா பிராந்தியத்தில் இருக்கும்  திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்கள் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் பயிரிடப்பட்டு .. வருடம் தோறும்  முறை தவறாமல் குத்தகை நெல் அளக்கப்பட்டு வந்தது.... இந்த சமய நிறுவனங்கள் வாயிலாக எண்ணற்றோர் பயனடைந்தனர்.. இவர்களை அண்டியிருந்த  பல்லாயிரம் குடும்பங்கள் வயிறார உண்டு .. பஞ்சம் என்பதையே அறியாமல் நிம்மதியாக வாழ்ந்தனர்..

அரசை நம்பியிருக்காமல், அவ்வப்பொழுது உள்ளூர் அளவிலேயே  குடி  மராமத்து உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் குளங்களைச் செம்மையாகப் பராமரித்தும் வந்தனர்.. 

முறை வைத்து பாசனம் செய்தல் என்ற பேச்சே அக்காலத்தில்  கிடையாது.. அதிகாலையில்  பல்விளக்கப் போகும் பொழுதே .. ஒரு பக்கம் காலால் மண்ணைத் தள்ளிவிட்டு   மடை வழியே  நிறையும் அளவுக்குத் தண்ணீர் வைப்பார்களாம்.. 
  
இத்தனையும் தொலைந்து போய் .. இன்று  புதர் மண்டி ..மண்மேடிட்டுக் காணப்படும் காவிரிப் படுகை ..  

ஆங்காங்கே அடுத்த ஊருக்குத் தண்ணீர் விடாமல் பிடித்து வைக்கும் தகர்ந்து போன செக் டாம்கள்.. சரிந்து போயிருக்கும்  ரிவிட்மென்ட்கள்.. அந்தரத்தில் தொங்கும் படித்துறைகள்.. குவியலாக பிளாஸ்டிக் கழிவுகள்..டாஸ்மாக் கடை பாட்டில்கள், மூடிகள், சாராய பாக்கெட்டுகள்..  

இந்த வருஷம் நெல் சாகுபடி பண்ணும் விவசாயிகளை  இன்ஷுரன்ஸ் பண்ணிக்கொள்ளச் சொல்லுகிறது ராஜாங்கம்.. 

ஆரம்பத்திலேயே நல்ல சகுனம்..  

எப்படியும் கடைசியாக ..  ஏதாவது இழப்பீடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை மட்டுமே வைத்து விதையைத் தெளிக்கும் விவசாயி.. 

திருப்பூருக்கு வேலைக்குப் போய்விட்ட சந்ததிகள்..  

இந்த வருஷம்.. கொடும்  பஞ்ச காலத்தில்  அரிசித்  தவிடு இல்லாவிட்டாலும் .. வைக்கோலாவது முதலாளி  வாயாரக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும்  கால்நடைகள்.. 

தஞ்சாவூர் டெல்டாவில் ..  என்றோ  நடந்தாய் .. வாழி காவேரி ..!







Monday, September 5, 2016

" துளஸீயால் அம்பாளை அர்ச்சிக்கலாமா?"




" துளஸீயால் அம்பாளை அர்ச்சிக்கலாமா?" என்று நண்பர் ஒருவர்  கேள்வி ஒன்றைப் போட்டார்..

துளஸீயால் அம்பாளை அர்ச்சிப்பது  விலக்கப்பட்டிருக்கிறது..

ஆனால் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தின் உத்தர பாகம் - பலச்ருதிப் பகுதியில் ..


   ஏபிர்  நாம ஸஹஸ்ரைஸ்து 
        ஸ்ரீசக்ரம் யோர்ச்சயேத் ஸக்ருத் |
  பத்மைர் வா  துளஸீ  புஷ்பை :
       கல்ஹாரைர்  வா கதம்பகை : | 52

தாமரை புஷ்பங்கள் அல்லது துளஸீயின் புஷ்பங்கள் அல்லது செங்கழுநீர் புஷ்பங்கள் .. முதலான நல்ல மணமுள்ள   புஷ்பங்களைக் கொண்டு   ஸ்ரீசக்ரத்தை  தேவியின் ஆயிரம் நாமங்களால் அர்ச்சிப்பதன்  பலன்  பற்றி சொல்லப்பட்டுள்ளது.

துளஸீயால் அம்பாளை அர்ச்சிப்பது கூடாதென  விலக்கப்பட்டிருக்கும்போது...  ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தின்  பலச்ருதியில்  மட்டும் - எங்ஙனம்   துளஸீயால் அர்ச்சனை  செய்வதைப்  பற்றிக் கூறப்பட்டுள்ளது என்பதே கேள்வி

" துளஸீ " என்றால் பொதுவாக துளஸீ  தளங்களையே நாம்  குறிப்பிடுவது வழக்கம்.  இந்த ச்லோகத்தில் துளஸீயின் புஷ்பங்களால்தான்   ஸ்ரீசக்ரத்தை அர்ச்சனை  செய்யச் சொல்லியிருக்கிறது. துளஸீயின்   தளங்களைக் கொண்டு அர்ச்சனை  செய்யச் சொல்லவில்லை.  

ஆக,  விலக்கு  என்பது இந்த இடத்தில் துளஸீ தளங்களுக்குத்தானேயன்றி துளஸீயின் புஷ்பங்களுக்கல்ல.

ஆனால்,  நீலா தந்த்ரம் போன்ற  வெகு சிலவற்றில்  குறிப்பிட்ட சில கார்யங்களின் ஸித்திகளுக்காக  விலக்கப்பட்டிருக்கும் துளஸீ முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டுள்ளனர் என்று G.V. கணேசய்யர் முதலியோரின் கருத்து.

இது சிறப்பு விதியேயன்றி பொது விதியல்ல..

அடுத்த கேள்வி .. துளஸீ  பூக்குமா..?..   நன்றாகப்  பூக்கும் ..

ஆனால்  பகலில்  துளஸீயின் புஷ்பங்களைச் சேகரிப்பது  கொஞ்சம்  ச்ரமமான வேலை .. ஸந்த்யா காலத்தில்  பறிப்பது  சற்று எளிது..






ராம துளஸீயின்   புஷ்பங்கள்  மிக அரிதாகவே  கண்ணில் படும்... 

தும்பைப்பூவைப் போல மிகச்சிறியதாக வெண்ணிறத்தில் இருக்கும்.













க்ருஷ்ண  துளஸீயின் புஷ்பம் கருமை கலந்த பழுப்பாக இருக்கும்..

















தென்கிழக்காசிய  துளஸீ  வகைகளில்  எலுமிச்சைத்  துளஸீ  
என்று ஒரு ஜாதீ  உண்டு..  
நூற்றுக் கணக்கில் புஷ்பித்துக் குலுங்கும்  ..  
செடியருகில்  சென்றாலே 
நிறைந்த மணம்  வீசும்..  




இதைப் போன்ற  துளஸீ புஷ்ப வகைகளை  ஸ்ரீசக்ரபூஜைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.