Tuesday, March 14, 2017

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் - 5



ஸார் ..
இந்த உலகத்தில் நம் கண்களுக்குத் தெரியும்படியான உடலுடன் அவர் வாழ்ந்தது தொண்ணுறு ஆண்டுகள் .. அவற்றுள்ளும் தாகத்திற்கெனத் தண்ணீர் பருகாமலேயே அவர் இருந்தது சுமார் எண்பது ஆண்டுகள் ..
  • அவர் எப்படித் தண்ணீர் குடிக்காமலேயே வாழ்ந்தார்.. ?
  • எப்படி பசி, தாகம், உறக்கம் இம் மூன்றையும் தன் வசத்தில் வைத்திருந்தார் ?
  • அஷ்டமா ஸித்திகளைப் பெற்ற நிக்ரஹானுக்ரஹ சக்தியாக அவர் எப்படி இருந்தார்?  
                    என்பன கூட ஆரூரன் மனத்தில் கேள்விகளாக  எழவில்லை ..

தமக்கு அத்தகையதொரு வல்லமை இருப்பது உலகிலிருக்கும் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதிலும் .. தனிமையில் இருக்கும் தம்மை ஒருவிதமான கீர்த்தியும் சூழ்ந்து கொண்டு விட அனுமதிக்கக் கூடாது என்பதிலும் அவர் கவனமாய் இருந்ததே ஆரூரன் மனத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.

1 comment:

  1. Please publish all available Sar's Diaryk KuRippugaL from your memory!It will benefit many Devotees of Sivan sar! Hara Hara Shankara, Jaya jaya Shankara! Sivan Sar ThiruvadigaLe Charanam!

    ReplyDelete