Tuesday, March 14, 2017

தோட்ட வேலை




இன்று ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களின் ஆராதனை தினம்.. 

"ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களின் மனதிற்கு உகந்தது கார்யம் எது?" என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார்..

"தோட்ட வேலை" செய்வது ஸ்ரீஸார் அவர்களுக்குப் பெரிதும் உவப்பான கார்யம்.. 

கும்பகோணம் ஸ்ரீமடத்திலும், திருவெண்காடு ஸ்ரீபரமசிவேந்த்ராள் அதிஷ்டானத்திலும் ஸ்ரீஸார் செய்திருக்கும் நந்தவன கைங்கர்யம் பற்றி வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.. 

நந்தவனம் முழுவதையும் தனியொருவராகக் கொத்தி முடித்தும்.. திருமேனியில் பொட்டு வியர்வையின்றி நின்றிருக்கும் அவரிடம்.." ஸார் இப்டிக் காய்ந்திருக்கே.. துளி மழை பெய்யக்கூடாதா?" என்று கேட்ட அன்பரை நோக்கி முறுவலித்து.. நிர்மலமாயிருந்த ஆகாசத்தைப் பார்த்துக் கைகாட்டிய சில கணங்களில் அவர்களிருவரும் நின்றிருந்த தோட்டத்தின் விஸ்தீரணத்துக்குள் மட்டும் பெருமழை கொட்டித் தீர்த்ததாம்..!

பாரம்பர்யமாக அனுமதிக்கப்பட்ட வ்ருக்ஷங்கள், செடிகொடிகள் தவிர பிறவற்றை வீட்டுத் தோட்டங்களில் வைக்கக்கூடாது என வலியுறுத்துவார். 

நவீன க்ரோட்டன்ஸ் வகைகளால் ஆரோக்யத்திற்குக் கேடு உண்டாகும்... 

புனிதமான நந்தவனத்தை மனத்தால் ஸ்மரித்து.. தன்னால் இயன்ற பணியைத் தொடர்ந்து ஆற்றி வரும் ஒருவனுக்கு கடும் பிணிகள் ஏதேனும் இருப்பினும், அவைகளும் கூட காலக்ரமத்தில் சரியாகி விடும் என்பதும் ஸ்ரீஸார் அவர்களின் கருத்து.

படங்கள் :  ஸ்ரீசிவன் சார் அவர்கள் கைத்தொண்டாற்றிய திருவெண்காடு அதிஷ்டான நந்தவனம்...







No comments:

Post a Comment