Tuesday, May 22, 2018

தர்ம ராஜ்யம் ..4 : டபீர் பண்டிதர்


Related image

தஞ்சை மன்னர் பிரதாபஸிம்ஹரின் அமைச்சர்..
அரசு மற்றும் நிதி நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவர்
பழைய முகலாயர் காலத்து நில அளவை முறைக்கு மாற்றாகப் புதிய முறையை ஏற்படுத்தித் தஞ்சை அரசின் வருவாயையும், குடிகளின் நலனையும் பெருக்கியவர்..         
ப்ரதாபஸிம்ஹர் மற்றும்  டபீர் பந்த் ஆகியோரின் மேலான ப்ரார்த்தனையை ஏற்று, கலாப காலத்தில் காஞ்சியிலிருந்து தஞ்சை சீமைக்கு விஜயம் செய்த ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 62வது ஆசார்யர்களான  பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர  ஸரஸ்வதீ சுவாமிகள் அவர்கள் (1746-1783A.D) காவிரி தீரத்தில் வாஸம் செய்யவேணும் என்று எண்ணியதற்காகக்  கும்பகோணத்தில்  காவிரியின் தென்கரையில் பகவத் படித்துறையருகில்  பூர்விகமாக ஸ்ரீமடத்துக்கிருந்து வந்த கிளை மடத்தை விரிவாக்கித் தந்தவர்.. அருகில் டபீர் அக்ரஹாரத்தையும், குளமொன்றையும் ஏற்படுத்தியவர்.. 
                       Image result for tanjore pratapa simha
நவாப் ஆட்சிக்காலம் வரைக்கும்  தஞ்சை ராஜ்யத்தில் ஸ்ரீமடத்திற்கு ஆங்காங்கு இருந்த நில வருமானங்களை  வசூல் செய்வதில் இருந்து வந்த நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  ஒவ்வொரு சுபாவிலும்  ஸ்ரீமடத்திற்குச் சேரவேண்டிய நிலவருமானத் தொகையைக் கணக்கிட்டு  அரசு அதிகாரிகள் மூலம் நேரடியாகக் கொண்டு செலுத்தப்படும் முறையை இவர் ஏற்படுத்தினார்..
இதையொத்த வசூல் முறை ஏற்படுத்தப்படாத காரணத்தால்தான்  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆற்காடு பிரதேசங்களில்  ஏறக்குறைய 750 க்ராமங்களில் வருஷாந்தர விளைச்சலில் ஸ்ரீமடத்துக்கு இருந்து வந்த "மேரை" என்னும் பங்கை வசூலிப்பதில் பிற்காலங்களில் முட்டுப்பாடு ஏற்பட்டது..  தொண்டைமண்டல க்ராமங்களிலிருந்து, ஸ்ரீமடத்திற்கும், பிற தேவஸ்தானங்களுக்கும் சேரவேண்டிய விளைச்சல் பங்கும்  அறவே நின்று போனது..
ஆனால், டபீர் பண்டிதரின் நிர்வாகத் திறமையால்  ஸ்ரீமடத்திற்கு " வேலி  குறுணி"   என்னும் விகிதத்தில் 18-19 நூற்றாண்டுகளில்  நிலையான வருமானம்  தொடர்ந்து கிடைத்தமை பற்றி  மராட்டிய மோடி ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன..

டபீர் பண்டிதருக்கு பசுக்களை பராமரிப்பதில் ஈடுபாடு அதிகம் இருந்ததாம்.. அவரே  நேரடியாக கோசேவையில் ஈடுபடுவாராம்..ஒருமுறை, அரசங்க அலுவல் காரணமாகக் கொட்டிலில் இருந்த பசுக்களுக்குத் தண்ணீர் காட்டச் சற்று தாமதமாகி விட்டதாம்.. கோமாதாவிற்குத் தாம்  பெரிய  அபராதம் இழைத்து விட்டதாகப் பெரிதும் வருந்தினாராம் பண்டிதர்..

இப்பெரும் பாவத்திற்கு பிராயசித்தமாகத்  தஞ்சை  விஜய ராமர் கோயிலையும்,  டபீர் குளத்தையும் அமைத்தாராம்.. விஜயராமருக்கு 'ப்ரதாப ராமர்' என்ற பெயரும் உண்டு. இங்கு  "கணேச லீலார்ணவம்" நாடகம் நடிக்கப்பட்டதாகவும் அறிகிறோம். இக்கோயிலை "டபீர் ராமசாமி கோயில்" என்றே  தஞ்சை மக்கள்   இன்றும்  அழைக்கின்றனர் 

1 comment: