Tuesday, September 25, 2018

அமெரிக்க விநாயகர்...1

                                       Image result for mahaperiyava pillayar 

புகழ் பெற்ற நூலகத் துறை மேதையான S.R.ரங்கநாதன் அவர்களின்  நூல் ஒன்றை  வாசித்துக் கொண்டிருந்தபோது...

பூஜ்யஸ்ரீ பெரீவா அவர்களுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் விவரித்திருந்த இச் சம்பவம் கண்ணில் பட்டது...

சீர்காழியைப் பூர்விகமாகக் கொண்ட  S.R. ரங்கநாதன் இந்திய நூலகத் துறையின் முன்னோடி...உலகெங்குமிருந்த பழம்பெருமை மிக்க நூல் நிலையங்களுடனும் நல்ல தொடர்பில் இருந்தவர்...

                   

1932ம்  வருஷத்தில் ஒருநாள்...

S.R.ரங்கநாதன்  பூஜ்யஸ்ரீ பெரீவாளைத்  தரிசிக்க வந்திருந்தார்...

ரங்கநாதனைக் கண்ணுற்ற   பூஜ்யஸ்ரீ பெரீவா அவரைப் பார்த்து...
" வெகுகாலத்திற்கு  முன்பு நம் தேசத்திலிருந்து தற்போதைய அமெரிக்காவிற்குச் சென்றவர்கள்  அங்கு ஹிந்து தெய்வங்களுக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரியுமோ ?" என்று வினவினார்கள்..

அதுவரையிலும் ரங்கநாதனுக்கு  அப்படி ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை.. அதனால் பதில் தர முடியாமல் மேற்கொண்டு அவர்கள் சொல்வதை எதிர்பார்த்து இருந்தார்..

சற்று நேரம் மௌனம்..

பிறகு, பூஜ்யஸ்ரீ பெரீவா அவர்களே தொடர்ந்தார்கள்...

"அப்படி அந்த நாட்டிற்குப் போய் அங்கேயே  தங்கிவிட்ட நம்ப ஜனங்கள் தங்களுக்காக கோயில்களைக் கட்டிக்கொள்ள வேணுமென்று  நினைத்து தொடங்கியபோது   முதலாவதாக  ஒரு பிள்ளையார் கோயிலைத்தான் கட்டியிருக்கணும்..
அப்படி நம்மவர்களால் வெகு காலத்திற்கு முன்னால் கட்டப்பட்டதாக  பிள்ளையார் கோயில் எதையும் பற்றி அங்கிருக்கும் பழைய ரிகார்டுகளில் ஏதாவது படமோ அல்லது விஷயமோ உன் கண்ணில் பட்டிருக்கா..?"

(தொடரும்)

No comments:

Post a Comment