Monday, March 27, 2017

ஸ்ரீஇளையாற்றங்குடி பெரீவா.. 2

 






ஸ்ரீஇளையாற்றங்குடி பெரீவா ...1


ஸ்ரீஇளையாற்றங்குடிபெரீவா ..இளமையில் திருவிடைமருதூரில்  மஹாராஷ்ட்ர ராஜ வம்சத்துக் குழந்தைகளுடன் விளையாடி வளர்ந்தவர்..

அதனால் மராட்டி ..ஹிந்துஸ்தானி பாஷைகளில் அனாயாசமாகப் பேசுவார்.. குதிரையேற்றத்திலும் நிபுணர்.. 
பீடாதிபத்யம் ஏற்ற பிறகு ஒருமுறை அர்தோதயம் ஸம்பவித்தபோது ஸ்ரீஆசார்யர்கள் குடந்தையில் இருந்தார்கள். மறுநாள் கோடியக்கரையில் ஸமுத்ரஸ்நாநம் பண்ணவேணுமென்று அவர்கள் சொன்னபோது ஸ்ரீமடத்து அதிகாரிகள் திகைத்துப் போயினர்.. 
ஒருநாளில் அவ்வளவு தொலைவை எப்படி அடைவது என்று  அனைவரும் யோசித்தனர்...
இரவு பூஜையை முடித்துக் கொண்ட ஸ்ரீஆசார்யாள்  ஸ்ரீமடத்துக் குதிரையொன்றின் மீதேறி இரவு நேரத்தில் பயணித்துக் கோடியக்கரையை அடைந்து அர்தோதய புண்யகாலத்தில் ஸமுத்ர ஸ்நநாநம செய்து பிற்பாடு அதே குதிரையின் மீதேறி ஸ்ரீமடம் திரும்பினார்களாம்..

ஸ்ரீ இளையாற்றங்குடி பெரீவா..அவர்களின் சிவபூஜை மிகவும் ப்ரஸித்தி பெற்றது ..
அவர்கள் தம் திருக்கண்களை மூடி ஸ்ரீசந்த்ரமௌளீச்வரருக்கு பில்வார்ச்சனை செய்யும்பொழுது.. தோஷ வில்வம் மட்டும் தனியாகத் தெறித்துப் போய் வெளியில் விழுமாம்..
உவேசா அவர்கள்தம் முதிர்ந்த ப்ராயத்தில் ஸ்ரீமடத்திற்கு அவ்வப்பொழுது வந்து ஸ்ரீபெரீவா அவர்களின் ஸ்ரீசந்த்ரமௌளீச்வர பூஜையை தர்சனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்..
அப்போது ஒருமுறை.. உவேசா அவர்கள்.. "ஸ்ரீஇளையாற்றங்குடி பெரீவா அவர்கள்உடலெங்கும் கண்ணாக மிக விமர்சையாக சிவ பூஜை செய்யும் பாங்கைத் தம் சிறு வயதில் கண்டிருப்பதாகவும் .. அதைப்போலவே ஸ்ரீபெரீவா அவர்களின் ஸ்ரீசந்த்ரமௌளீச்வரபூஜையின் அழகும் இருக்கிறது" என்றுஸ்ரீபெரீவாளிடம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டாராம்..

Tuesday, March 14, 2017

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் - 5



ஸார் ..
இந்த உலகத்தில் நம் கண்களுக்குத் தெரியும்படியான உடலுடன் அவர் வாழ்ந்தது தொண்ணுறு ஆண்டுகள் .. அவற்றுள்ளும் தாகத்திற்கெனத் தண்ணீர் பருகாமலேயே அவர் இருந்தது சுமார் எண்பது ஆண்டுகள் ..
  • அவர் எப்படித் தண்ணீர் குடிக்காமலேயே வாழ்ந்தார்.. ?
  • எப்படி பசி, தாகம், உறக்கம் இம் மூன்றையும் தன் வசத்தில் வைத்திருந்தார் ?
  • அஷ்டமா ஸித்திகளைப் பெற்ற நிக்ரஹானுக்ரஹ சக்தியாக அவர் எப்படி இருந்தார்?  
                    என்பன கூட ஆரூரன் மனத்தில் கேள்விகளாக  எழவில்லை ..

தமக்கு அத்தகையதொரு வல்லமை இருப்பது உலகிலிருக்கும் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதிலும் .. தனிமையில் இருக்கும் தம்மை ஒருவிதமான கீர்த்தியும் சூழ்ந்து கொண்டு விட அனுமதிக்கக் கூடாது என்பதிலும் அவர் கவனமாய் இருந்ததே ஆரூரன் மனத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் - 4

                                

" என் தம்பி சாச்சுவுக்கு மூணு பாஷையும்  தெரியும்.."

ஸ்ரீஸார்  அவர்கள் கும்பகோணத்தில் ஸஞ்சரித்து வந்தபோது..  சில நேரங்களில்  ஸ்ரீமடத்தின் மேற்பால் இருக்கும் தோட்டத்தில் தனித்திருப்பார்கள்.

அப்போதெல்லாம் அருகிலுள்ள  மரங்களிலிருந்து,,  கிளிகள், சிட்டுக்குருவிகள் முதலிய பக்ஷிகள்  கீழிறங்கி வந்து, அவர்களின் திருமேனியின் மீதமர்ந்து கொண்டு விளையாடிய காட்சிகளைப் பலரும் கண்டுள்ளனர் ..

அதேவிதமாக அணிற்பிள்ளைகள் ஆங்காங்கிருந்து ஓடிவந்து ஸ்ரீஸார் அவர்கள் அன்புடன் தரும் உணவை எடுத்துக்கொள்ளும் ..

காவிரிக்கரையருகில் உயரத்தில் பறக்கும் கருட பக்ஷிகள் கூட.. ஸ்ரீஸார் அவர்கள் கையைக் காட்டி அழைத்ததும் கீழிறங்கி வந்து அமர்வதை அனைவரும் வியப்புடன் பார்த்துள்ளனர்..

"என் தம்பி சாச்சுவுக்கு (ஸ்ரீஸார் அவர்களின் இல்லப் பெயர்)  மனுஷாள் பாஷை, பக்ஷி பாஷை, மிருக  பாஷை  என்னும் மூணு பாஷையும்  தெரியும் " என்று ஸ்ரீபெரீவா அவர்கள்  கூறினதாக ஆரூரனிடம்  ஒருசமயம் ஸ்ரீஸார் சொல்லியிருக்கிறார்கள் ..

தோட்ட வேலை




இன்று ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களின் ஆராதனை தினம்.. 

"ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களின் மனதிற்கு உகந்தது கார்யம் எது?" என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார்..

"தோட்ட வேலை" செய்வது ஸ்ரீஸார் அவர்களுக்குப் பெரிதும் உவப்பான கார்யம்.. 

கும்பகோணம் ஸ்ரீமடத்திலும், திருவெண்காடு ஸ்ரீபரமசிவேந்த்ராள் அதிஷ்டானத்திலும் ஸ்ரீஸார் செய்திருக்கும் நந்தவன கைங்கர்யம் பற்றி வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.. 

நந்தவனம் முழுவதையும் தனியொருவராகக் கொத்தி முடித்தும்.. திருமேனியில் பொட்டு வியர்வையின்றி நின்றிருக்கும் அவரிடம்.." ஸார் இப்டிக் காய்ந்திருக்கே.. துளி மழை பெய்யக்கூடாதா?" என்று கேட்ட அன்பரை நோக்கி முறுவலித்து.. நிர்மலமாயிருந்த ஆகாசத்தைப் பார்த்துக் கைகாட்டிய சில கணங்களில் அவர்களிருவரும் நின்றிருந்த தோட்டத்தின் விஸ்தீரணத்துக்குள் மட்டும் பெருமழை கொட்டித் தீர்த்ததாம்..!

பாரம்பர்யமாக அனுமதிக்கப்பட்ட வ்ருக்ஷங்கள், செடிகொடிகள் தவிர பிறவற்றை வீட்டுத் தோட்டங்களில் வைக்கக்கூடாது என வலியுறுத்துவார். 

நவீன க்ரோட்டன்ஸ் வகைகளால் ஆரோக்யத்திற்குக் கேடு உண்டாகும்... 

புனிதமான நந்தவனத்தை மனத்தால் ஸ்மரித்து.. தன்னால் இயன்ற பணியைத் தொடர்ந்து ஆற்றி வரும் ஒருவனுக்கு கடும் பிணிகள் ஏதேனும் இருப்பினும், அவைகளும் கூட காலக்ரமத்தில் சரியாகி விடும் என்பதும் ஸ்ரீஸார் அவர்களின் கருத்து.

படங்கள் :  ஸ்ரீசிவன் சார் அவர்கள் கைத்தொண்டாற்றிய திருவெண்காடு அதிஷ்டான நந்தவனம்...







Saturday, March 4, 2017

ஆலய நிர்வாகிகள் அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் (1973)


ஸ்ரீவ்யாஸ பாரத கலாதி ஸதஸ் ஸமாஜம், 
ஸ்ரீமடம், காஞ்சீபுரம்  (1973-74) 

ஸ்ரீபெரிவாளின் திருவுளப்படி ஸ்ரீமடத்தின் மூலமாக 1962ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வ்யாஸ பாரத கலாதி ஸதஸ் நிகழ்வுகளின்போது வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், பல்துறைக் கலைகள் ஒவ்வொன்றிலும் வல்லோரைக் கௌரவித்து அவர்களின் புலமையை உலகறியச் செய்யும் அரும்பணியை ஆற்றிவருகிறது ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் வ்யாஸ பாரத கலாதி ஸதஸ் ஸமாஜம். 
1962 முதல், ஒவ்வோராண்டும் ஸதஸ் நிகழ்வுகள் பற்றிய சிறப்பு மலரும் ஸமாஜத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாராணஸீ ப்ரஹ்மஸ்ரீ P.N.பட்டாபிராம சாஸ்த்ரிகள், சிதம்பரம் ப்ரஹ்மஸ்ரீ ராமலிங்க தீக்ஷிதர், தர்மபுரம் சிவஸ்ரீ ஸ்வாமிநாத சிவாசார்யர், திருவாவடுதுறை சிவஸ்ரீ ஸ்வாமிநாத சிவாசார்யர், அல்லூர் சிவஸ்ரீ விச்வநாத சிவாசார்யர், திருவாடாணை சிவஸ்ரீ ஐயாமணி சிவாசார்யார், காஞ்சி சிவஸ்ரீ இஷ்டஸித்தி ஏகாம்ரகுருக்கள், மீஞ்சூர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ சேஷ பட்டாசார்யார், திருவில்லிபுத்தூர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அலங்கார பட்டாச்சார்யார், கணபதி ஸ்தபதியார், பழனி செல்லக்கண்ணு ஸ்தபதியார், தொண்டர்குலசேகரன் என்று ஸ்ரீபெரீவா அவர்களால் சிறப்பிக்கப்பட்ட கம்பன் அடிப்பொடி. சா.கணேசன், ஸ்ரீ T.M.P. மஹாதேவன், சிவஸ்ரீ வஜ்ரவேலு முதவியார், மயிலம் சிவஸ்ரீ சிவசுப்ரமணியன், புலவர் வெங்கடேசன் போன்ற அநேக வேத ஆகம சில்ப சாஸ்த்ர நிபுணர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டும், அவ்வப்போது எழும் சர்ச்சைகள் குறித்து ஸ்ரீ ஆசார்ய சுவாமிகள் அவர்களின் திருமுன்னிலையில் விவாதித்தும் அவர்களின் முடிவான கருத்துக்களை ஏற்றும் வந்துள்ளனர்.
தமிழக வரலாற்றில் முதன்முதலாக ஒரு வாரகாலத்திற்கு க்ராமக் கோயில் பூசாரிகளுக்கு வழிபாட்டுப் பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் அளிக்கும் அரும்பணியை ஸ்ரீமடம்தான் இந்த ஸமாஜம் வாயிலாகத் தொடங்கியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறை வேண்டுகோளுக்கிணங்கி, ஸ்ரீபெரிவாளின் அருளாணைப்படி, இந்த ஸமாஜத்தின் வாயிலாகத்தான் நூற்றுக்கணக்கான வேத சிவாகம வித்யார்த்திகளைத் தயார் செய்த அல்லூர் வேத சிவாகம பாடசாலை துவங்கி நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ..
ஒவ்வோராண்டும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட துறையின் பொறுப்பான அதிகாரிகளையும் இந்த ஸதஸ் நிகழ்வுகளின்போது பங்கேற்க வைப்பதன் மூலம் நமது மதம், கலாசாரம் மற்றும் பண்பாடு சம்பந்தமான விஷயங்களை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டு.. பழமை மாறாது திருப்பணி செய்வித்தல் மற்றும் திருக்கோயில் வழக்கங்களை மரபு மாறாமல் காத்து வர அவர்களை ஊக்குவித்து வந்துள்ளதும் முக்யமானதாகும்.
ஆலய நிர்வாகிகள் அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் 1973ம் வருடத்திய ஸதஸில் வெளிட்ட அருளாணை தற்போது வெளியிடப்படுகிறது