Wednesday, December 21, 2016

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள்..3






1986ம் வருஷம்  கார்த்திகை இரண்டாம் சோமவாரத்தன்று  முன்னிரவில்..

ஸ்ரீபெரீவா அவர்கள் 

" முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. "


என்னும் திருவாசகம் அச்சோப் பதிகப்  பாடலில்  உள்ள 
 " சித்தமலம் அறிவித்து  சிவமாக்கி " 
என்பதன்   பொருளைக் குறிப்பிட்டு  நிறைவில் 

"ஆயுஸுக்கும்  த்யாகராஜாவையே நினைச்சிண்டிரு.." 
என்று மீளாஅடிமைக்கு  உத்தரவாயிற்று  ..

*******

பின்னர்  1991ம் வருஷம் ஸத்குரு ஸ்ரீசிவன் சார் அவர்கள் உத்தரவு பெற்று  பரீக்ஷைக்கு படிக்க  திருவாரூருக்குக் கிளம்பிய சமயம்  ஸ்ரீஸார்  அவர்கள்  ஆரூரனுக்குச் சொல்லியனுப்பியது .

"ஸந்த்யாகாலம்  கமலாலயத்திற்குப் போ.. ஸந்த்யாவந்தனம் பண்ணு .. 
ஸாயரக்ஷை  முடிஞ்சப்பறம் .. தியாகராஜஸ்வாமி   சன்னதிக்குப்   போ.. 
நேராக  நிற்காமல்..  கொஞ்சம் ஒதுங்கி நின்னு .. 

 " ஸ்வாமீ .. எனக்கு மந்த்ரம் தெரியாது ..  
பூஜை தெரியாது.. 
ஒண்ணுமே  தெரியாது.. 
ஒரு யோக்யதையும் கிடையாது.. 
நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்னு 
எங்க  குரு   சிவன் ஸார்  
என்னை ஸ்வாமி உங்க கிட்டே அனுப்பினார்னு.. 

ரெண்டு கையையும் முன்னாடி நீட்டி மத்தவா யாருக்கும் கேட்காதபடி .. பவ்யமா..  ஸ்வாமியிடம்   சொல்லுப்பா ..
மத்ததை ஸ்வாமி  பார்த்துப்பார்.. ! "




3 comments:

  1. Sivan Saar thunai.. what a blessing.. you are such a gifted soul..

    ReplyDelete
  2. Great Arooran Sir! Please give a little of those Great Blessings given by Maha Periyava and Sivan Sar to us humble souls also! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    ReplyDelete