Thursday, June 7, 2018

திருவாரூர்த் திருவீதிகள்


 'படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார் 
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் 
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய் 
நடந்த செந்தா மரையடி நாறுமால்
என பெரியபுராணம்  திருநகரச் சிறப்பில் பாடுகிறார் ஸ்ரீசேக்கிழார் ஸ்வாமிகள்.

ஸ்ரீத்யாகேசர், வன்தொண்டர் நம்பிஆரூரருக்காகப்  பரவை நாச்சியாரது திருமனைக்கு  தூது நடந்தபோது அவரின் திருவடித் தாமரைகள் தோய்ந்த வீதியே   'திருவடிப்போது நாறிய திருவீதி'(1) என்று வழங்கப்பட்டது..

இவ்விடம்  துர்க்கை அம்மன் சன்னதித்தெரு என வழங்கப்படுகிறது..இங்கு இருந்த  பரவையார் திருமனையே  தற்போது ஸ்ரீஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  திருக்கோயிலாக உள்ளது. 

திருவாரூரில் ஆழித்தேரோடும்  நான்கு திருவீதிகளில் ஒன்றான தெற்குவீதியை அணிமுடிநெடிய திருவீதி(2) எனவும், அதற்குத் தெற்கில்  இருப்பதை  பொன்பரப்பிய  திருவீதி(3) எனவும்,  அதற்கும் தெற்கில் இருக்கும் வீதியை புகழாபரணத்  திருவீதி(4) எனவும் கூறுவர்.. 

பொன்பரப்பிய  திருவீதியின் நடுவில் இருப்பது குமரக்கோட்டம் (5).. குமரக் கோட்டத்தின் கிழக்கில் இருக்கும் பகுதி தற்போது குமரக்கோயில் தெருவென்றும.. மேற்புறம் இருக்கும் தெரு செட்டித்தெரு (V.S,தெரு)வென்றும் வழங்கப்படுகிறது..  

புகழாபரணத்  திருவீதியின் தற்போதைய பெயர் காரைக்காட்டுத்தெரு ஆகும்... 

No comments:

Post a Comment