Tuesday, August 22, 2017

ப்ருதிவீ லிங்கம்


அன்று ஸ்ரீத்யாகேசர் பற்றிய யஜமானரின் நீண்ட பொழிவின்  இடையில்   
"ப்ருதிவீ  க்ஷேத்ரம் எது? திருவாரூரா.. காஞ்சீபுரமா?... ப்ருதிவீ லிங்கம் எங்கேயிருக்கு?" என்ற அடிமையின் ஸந்தேஹங்களை  அவர்களிடம் ஸமர்ப்பித்தார் பாணாம்பட்டு கண்ணன் மாமா..

யஜமானர்.. அவற்றுக்குப்  பதிலளிக்காமல் சற்று இடைவெளி விட்டு..
"அந்த தீக்ஷிதர் க்ருதியில் ஓரிடத்தில்  'ஸோமாஸ்கந்த' என்று. வருமே' என்று சொல்லி மெலிதாகப் புன்முறுவல் பூத்தார்கள்..

சிறு பிராயத்தில் இருந்த அடிமை..ஆர்வம் மிகுந்து ..
." முசுகுந்தாதிபூஜித ஸோமாஸ்கந்தமூர்த்தயே " என்று பேகடா ராகத்திலமைந்த 'த்யாகராஜாய நமஸ்தே' கீர்த்தனையில் வந்திருப்பதை பற்றிச் சொல்லவும்..


யஜமானர் "அதில்லை" என்று அழுத்தமாகக் கூறிவிட்டார்கள்..
அடிமைக்கு அவர்கள் இவ்வாறு சொன்னதன் மேல் விபரம் புரியவில்லை..

"அந்த கீர்த்தனையில்தான்  'ஸோமாஸ்கந்த' என்று வந்திருக்கே.. பிறகு ஏன் 'அதில்லை...' என்று அழுத்திச் சொல்லி மறுத்து விட்டார்கள்?' என்று  நினைத்தபடி யஜமானர் மேற்கொண்டு சொல்லப்போவதை அடிமை  எதிர்பார்த்து இருந்தபோது...

மந்தஹாஸத்துடன் " இவனுக்கு 'சிந்தயமாகந்த' தெரியுமோன்னு கேளு" என்று கண்ணன் மாமாவிடம்  அடிமையைப் பார்த்துக்  கேட்கச் சொன்னார்கள்..

தாழ்மையுடன் பதில் சொன்ன அடிமைக்கு... 
"அதில்தான்  ஏகாம்பரேச்வரர் பற்றி நிறைவாக தீக்ஷிதர் முடித்திருக்கிறாரே.. அதையும்  சொல்லு.." என்று கருணையுடன் உத்தரவாயிற்று..  .

" சேத: ஸ்ரீஸோமாஸ்கந்தம் ' என்று  இந்த கீர்த்தனையில் வரது..
நிறைவில் ' குருகுஹாந்தரங்கம் - ப்ருதிவீ லிங்கம்' னும் இருக்கு" என்று அடிமை பணிந்து சொன்னதும்..

" அதற்குத்தான் ஸோமாஸ்கந்த என்று வரும் கீர்த்தனையை கவனிக்கச் சொன்னது ... 
ப்ருதிவீ க்ஷேத்ரம் என்பது  காஞ்சீ க்ஷேத்ரம்தான்.. 
ப்ருதிவீ லிங்கம்.. இங்கிருக்கும் ஏகாம்ரேச்வரர்தான்.. 
வல்மீகநாதர் இருக்கும்  திருவாரூர்  மூலாதார க்ஷேத்ரம்.. " என்று முடித்தார்கள்..
                                           https://www.youtube.com/watch?v=eNf69UQryv4

1 comment:

  1. ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர! மஹா பெரியவா திருவடிகளே சரணம்!

    ReplyDelete