Tuesday, June 20, 2017

நிஜமான த்யாகராஜா



                           
முன்னொரு சமயம் ஒரு கார்த்திகை சோமவாரத்தன்று இரவில்...
"த்யாகராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ ?" என்று எஜமான் ஆரூரனைப் பார்த்துக் கேட்டுவிட்டு சில நொடிகள் புன்முறுவலித்தார்கள்..
பதில் சொல்ல தெரியாமல் அவர்களையே பார்த்து வணங்கியபடியிருந்த ஆரூரனுக்கு உதவியாக வந்தார் பாணாம்பட்டு கண்ணன் மாமா ..
"
த்யாகராஜான்னா... திருவாரூர் கோவில்ல இருக்கற ஸ்வாமி" . என்று முந்திக்கொண்டு பதில் சொல்லி சமாளித்தார் கண்ணன் மாமா ..
" இல்ல்ல " என்று எஜமான் அழுத்தமாகத் தலையாட்டி மறுத்துவிட்டார்கள்..
"எல்லாம் பெரீவாளுக்குத்தான் தெரியும் .. அவாதான் சொல்லணும்" என்றார் பாலு மாமா..
சில நொடிகள் எஜமான் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்..
"த்யாகராஜான்னா ... "த்யாகம் பண்ணின ராஜா ..
எல்லா ஐச்வர்யங்களையும் முழுதாக த்யாகம் பண்ணின ராஜா.. அவன் யாரு தெரியுமோ..?
 அவன் மனுநீதிச்சோழன் .. அவன்தான் த்யாகராஜா
" என்று முடித்தார்கள்..
இந்த இரு படங்களையும் பார்க்கின்ற மாத்திரத்தில் மனஸுக்கு இப்படித் தோன்றுகிறது ..
" மனுநீதிச்சோழன் இப்போதிருந்தால்...
தங்களுடைய ஆயுஸு முழுவதும் தங்க, வெள்ளி கிரீடம், ஸிம்ஹாஸனம், சத்ர, சாமராதிகள் என்று எதையுமே விட மனமில்லாமல் அலையும் பலர் இடையில்..
தங்க நூலால் நெய்த பீதாம்பரம்..ஆபரணங்கள் என்று அனைத்தையும் வாரிப் போட்டுக்கொண்டு... அழகுக்கொரு வடிவமாக இருந்து கொண்டு .. லோகமெங்கும் அறுபதாண்டுகள் விஜயம் செய்து .. அத்வைதராஜ்ய லக்ஷ்மீயை நிலைபெறச்செய்து.. சட்டென்று அலக்ஷ்யமாக யாவற்றையும் துறந்துவிட்ட எஜமான்..
 "இவரன்றோ நிஜமான த்யாகராஜா.. " என்றுதான் அதிசயித்திருப்பான்.."
இந்தப் படங்களை பார்க்கின்ற மாத்திரத்தில் மனஸுக்கு இப்படித்தான் தோன்றுகிறது ..


1 comment:

  1. திருவாரூர்ப் புராணம் pdf file இருந்தால் எனக்குக் கொடுங்களேன்.

    ReplyDelete