Monday, October 31, 2016

ஸ்வாமிநாதன் ... 1



இன்று ஸ்வாமிமலை ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஸ்கந்த சஷ்டி விசேஷ அபிஷேகம், ஷண்முகார்ச்சனை, ஸமாராதனைக்கு ஸ்ரீமடத்தின் பழவடியாருள் முக்யஸ்தரான தண்ணீர்க்குன்னம் உடையார் அழைத்திருந்தார்..
பூஜ்யஸ்ரீ ஆசார்யர்களின் திருவுளப்படி பெருமளவு பசும்பால், விபூதி ஆகியனவும் ஸ்ரீமடத்தின் வாஞ்சியூர் கோசாலையிலிருந்து அபிஷேகத்திற்காகச் சேர்ப்பிக்கப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களும் தமது பரிவாரத்துடன் அங்கு வந்திருந்தார்கள்..
சோழிய முன் உச்சிக் குடுமியுடன்.. ஸ்வர்ண கௌபீனத்துடன்.. வலது கையில் பலாச தண்டம் ஏந்தி.. ப்ரம்மசாரிக் கோலத்தில் ஸ்வாமி நின்றார்..
ஸன்னதிமுறை சிவாசார்யர் தம் இரு கைககள் நிறைய விபூதியை அள்ளி அள்ளி எடுத்துத் திருமேனி முழுதும் நிறைத்தார்..
.ஏராளமான த்ரவ்யங்களைக் கொண்டு ஸ்வாமிக்குச் செய்விக்கப்பட்ட அபிஷேகம் நிறைவுற்றது..
அலங்காரம் செய்தார்கள்..முத்தங்கி, ஸ்வர்ண க்ரீடம், வஜ்ரவேல், ஸுப்ரமண்ய ஸஹஸ்ரநாமங்கள் பொறித்த ஆயிரத்தெட்டு ஸ்வர்ணத் தாமரை மாலை, மணிகள் பதித்த ருத்ராக்ஷ மாலையுடன் ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி ஜ்வலித்தார்...
அர்த்த மண்டபத்தில் ஸ்வாமி அருகில் நின்ற நேரத்தில்... ஸ்ரீசிவன்சார் அவர்கள்.. தம் குல தெய்வமான ஸ்ரீஸ்வாமிநாதஸ்வாமியின் அருமை பற்றியும்.. ஸ்ரீபெரீவா அவர்களுக்கு .. அவர்களின் குலதெய்வமான ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியின் பெயரையே வைத்தது பற்றியும் ஆரூரனிடம் பலகாலும் சொன்னவை நினைவில் தோன்றின..
பூஜைகள் நிறைவுற்றன.. திருவடிகளில் தோய்ந்திருந்த அபிஷேக விபூதி ப்ரஸாதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்..
தங்கக் கொடிமரத்தின் அருகில் வந்ததும் "ஸார்.. ஸ்வாமி அணிந்திருந்த தங்கக் கோவணத்த பாத்தீங்களா..? என்று கேட்டார் உடையார் தம்பி...
கேட்டவர் ஸ்ரீபெரீவா அவர்களைப் பற்றித் தொடர்ந்தார்... 

2 comments:

  1. Respected Sir,
    You are such a blessed person who had the opportunity to not only darshan but also perform kaigaryam for Sivan Sir. Are you the same person who narrated the incident “1387” – A Miraculous Incident? Do you by any chance hail from Nemmeli Venkatraman Iyer’s family? If yes, Mahaperiyavaa has completely blessed your family lineage by instilling selfless dedication, devotion, relentless bakthi for generations'. If possible, please verbally share Mahaperiyavaa/Sivan Sir experiences in YouTube. This will largely benefit senior citizens who are better off @ listening than reading.

    ReplyDelete
  2. Muruga CharaNam! Dhivya Dharisanam on Skanda Sashti!

    ReplyDelete